கேரள மாநிலம் இடுக்கியில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாயினர். கேரள மாநிலம் மாவேலிகரையை சேர்ந்தவர்கள் பேருந்தில் தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்துவிட்டு திரும்பி சென்றனர். அவர்கள் சென்ற பேருந்து இடுக்கி மாவட்டம் குட்டி காணம் என்ற பகுதியில் வளைவில் திரும்பிய போது 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் மரத்தில் சிக்கிக்கொண்டது. இதனையடுத்து அவ்வழியாக சென்ற ஐயப்ப பக்தர்கள் கொடுத்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர், பேருந்தில் சிக்கிக்கொண்ட 34 பேரை படுகாயங்களுடன் மீட்டனர்.