திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.நீலகிரியில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது, திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்துள்ளதாக புகார் எழுந்துள்ள சம்பவம், மக்களின் உணர்வில், பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.