2024ம் ஆண்டில் மட்டும் விமானங்களுக்கு 728 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர், மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.