மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த கொள்முதலுக்கான ஏல முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த வான் பாதுகாப்பு அமைப்பை முப்படைகளும் பயன்படுத்தவுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. நிலம், மலைப் பகுதிகள், பாலைவனம், கடலோர பகுதிகள் என அனைத்து விதமான நிலப்பரப்பிலும் இவை நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.