இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச விலை வரம்பை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை விளைபொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.வெங்காய உற்பத்தியில் முக்கிய மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.