Also Watch
Read this
By: Web Team

கொல்கத்தாவில், நேற்று முதல் கனமழை கொட்டி தீர்த்ததால், நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கனமழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்த நிலையில், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்த நிலையில் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீரில், ஒரு சிறுவன் நீச்சல் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.