திரைத்துறையினர் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும் என தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தினார். "புஷ்பா-2" திரைப்பட கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக, தெலங்கானா திரை பிரபலங்கள் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புதிய படங்கள் வெளியாகும்போது சிறப்புக் காட்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்படாது என முதல்வர் கறாராக கூறியுள்ளார்.