பாகிஸ்தானில் எரிவாயு ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்தனர். முல்தான் மாவட்டத்தில் எரிவாயு ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது.தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 31 பேர் படுகாயமடைந்தனர்.