கேரளாவில் தலித் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை 44 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது கல்லூரி படித்து வரும் அந்த இளம்பெண், 13 வயது சிறுமியாக இருந்ததில் இருந்தே பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இதுவரை 59 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.