வீடுகளில் மாமியார் மருமகள் இடையே சுமுகமான உறவு இருக்காது. இப்போது இந்த மோதல் எல்லாம் குறைந்து வருகிறது. ஆனால் இப்போது மாமியார் மருமகள் இடையே சிக்கிக்கொள்வது என்னவோ கணவர்கள் தான்.அந்த வகையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒரு மாமியாருக்கு மருமகள் கொடுத்த கிப்ட்டை பார்த்தால் நிச்சயம் ஒரு நொடி நீங்கள் ஸ்டன் ஆகிடுவீங்க. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுகேஷ், இவருக்கும் அதே மாவத்தை சேர்ந்த ஸ்ரீரங்கநாயகி என்பவருக்கும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடந்துள்ளது, இந்நிலையில்கல்யாணத்திற்குப் பிறகு எல்லாரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாகவே வசித்து வந்த சூழலில் தான் சுகேஷின் தாயார் பவானிக்கு 50ஆவது பிறந்த நாள் வந்துள்ளது.மாமியாரின் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாட முடிவு செய்து அட்டகாசமான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இதனையடுத்து மாமியார் பிறந்த நாளுக்கு உறவினர்கள் அனைவரையும் அழைத்து விழா போல தயாரிப்புகளை செய்த நிலையில் மாமியார் வீட்டின் உள்ளே கால் அடி எடுத்து வைத்த உடன் பூக்கள் தூவி வரவேற்பு அளித்துள்ளனர்.மேலும், கலர் கலர் புஸ்வானமும் ஒளிர மாமியாருக்கு வரவேற்பளித்துள்ளார்.. அதன் பிறகு பவானியை மேடை ஏற்றி கேக் வெட்ட வைத்துள்ளார். ஆனால், இது வெறும் ஆரம்பம் தான்.தனது மாமியாருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை மருமகள் கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்படி ஒரு கோடிக்கு என்ன பரிசு கொடுத்தாங்க தெரியுமா?50ஆவது பிறந்த நாளை கொண்டாடும் மாமியாருக்கு, 50 லட்சத்து 50 ஆயிரத்து 50 ரூபாய் பணத்தை ரொக்கமாக கொடுத்திருக்கிறார் ஸ்ரீரங்கநாயகி. மேலும், தங்கம் விலை பறந்து கொண்டு இருக்கும் சூழலில் 100 கிராம் எடைகொண்ட இரு தங்கக் கட்டிகளையும் பரிசாகக் கொடுத்துள்ளார்.அட இது மட்டும் இல்லாம 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ், விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் என கிஃப்டுகளை வாரி வழங்கியுள்ளார். மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கியுள்ளார்.இதை எல்லாம் பார்த்து மாமியார் பாவனி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய்விட்டார். பிறந்த நாள் விழாவுக்கு வந்த உறவினர்கள் நமக்கு இப்படி ஒரு மருமகள் இல்லையே என்று நினைக்கும் அளவிற்கு இதை வியந்து பாராட்டி உள்ளனர்.