புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பஞ்சாலைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் துருப்பிடித்து எலும்பு கூடாகவும், நூல்கள் மக்கியும் காட்சியளிப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்த பஞ்சாலைகயை மீண்டும் புனரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் குறைந்தது 25 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என புதுச்சேரி மக்களும் ,தொழிற்சங்கங்களும் புலம்புகின்றனர்.