திடீர் திருப்பமாக உக்ரைன் போரை மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. வரும் எட்டாம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் எனவும், ரஷ்யாவின் வெற்றி தின கொண்டாட்டங்களை ஒட்டி போருக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் மாஸ்கோவில் அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது. இந்த வாய்ப்பை உக்ரைன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், போர் நிறுத்த த்தை மீறினால் ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் எனவும் அறிக்கை ஒன்றில் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தொடர் தாக்குதல்களால் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கா, தாக்குதலை நிறுத்தவில்லை என்றால், அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து விலகி விடுவோம் என எச்சரித்த நிலையில், ரஷ்யா 3 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.