உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்பினார். கடந்த சில நாட்களாக ரஜினிகாந்துக்கு சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் உடல் நலப்பாதிப்புகள் ஏற்பட்டதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 30-ம் தேதி மாலை அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற பரிசோதனையில் ரஜினிகாந்துக்கு இதய ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சரிசெய்யும் வகையில் அவரது இதய ரத்தநாளத்தில் 'ஸ்டென்ட்' வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் உடல்நிலை சீரானதையடுத்து, இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.