மணிப்பூரில் மெய்தி ஆயுதக்குழுவை சேர்ந்த தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, போராட்டம் வெடித்துள்ளதால் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. மெய்தி ஆயுதக்குழுவான அரம்பை டெங்கோல் என்ற அமைப்பின் தலைவர் கனன் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து தலைநகர் இம்பாலில், அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டயர்களை எரித்தும் வாகனங்களுக்கு தீ வைத்தும் அத்துமீறியதால் நிலைமை மோசமானது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை களைத்தனர்.