11ஆவது புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டனஸ் அணிகள் வெற்றிப் பெற்றன. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 31 க்கு 28 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 48 க்கு 36 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.