பிரதமர் மோடி அடுத்தாண்டு மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு பிரதமர் முகமது முய்சு, பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அடுத்தாண்டு மாலத்தீவு வரவேண்டும் என முகமது முய்சு முன்வைத்த கோரிக்கைக்கு பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்ததாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்த பயணத்தின் மூலம் வரும் காலங்களில் இந்தியா- மாலத்தீவு உறவில் நல்ல முன்னேற்றம் அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.