இந்தியா மற்றும் குவைத் இடையே பல்வேறு துறைகள் சார்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அரசுமுறை பயணத்தின் போது குவைத் பிரதமர் ஷேக் அகமது அல் அப்துல்லா உடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் அந்த ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.