நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பைபர் படகு மீனவர்கள் மீது விசைப் படகு மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் செருதூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்ற மீனவர்கள் தோப்புதுறைக்கு கிழக்கே 23 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து விட்டு நடுக்கடலில் படகை நங்கூரமிட்டு நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துள்ளனர். அப்போது, அவ்வழியாக 2 விசைப்படகுகளில் வந்த அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள், பைபர் படகு மீனவர்களின் வலையை அறுத்துவிட்டதோடு, மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.