பாகிஸ்தானில் தனக்கு யாருமில்லை எனவும், தனது குடும்பத்துடன் வாழ அனுமதிக்குமாறும் 35 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் பெண் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேஷ் குக்ரேஜா என்பவரை திருமணம் செய்து கொண்டு மகன், மகள், பேர குழந்தைகளுடன் இந்தியாவில் வசித்து வரும் பாக்கிஸ்தானியரான சார்த் பாயை, உடனடியாக வெளியேற காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.