சிந்து நதி நீரை நிறுத்தினால், இந்தியா போருக்கு தயாராக இருக்க வேண்டும் என பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை விடுத்ததுள்ளார். பஹல்காம் தாக்குதல் சம்பவம் காரணமாக மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் நிலையில், மேலும் எரிச்சலூட்டும் விதமாக இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் ஹனிப் அப்பாசி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் அனைத்தும் இந்தியாவை நோக்கி மட்டுமே உள்ளதாக மிரட்டியுள்ளார்.