நாட்டை ஒற்றை ஆட்சி வடிவத்தின் அபாயங்களுக்குள் தள்ளிவிடும் "ஒரு தேசம் ஒரு தேர்தலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் குறித்து தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ள அவர்,"ஒரு தேசம் ஒரு தேர்தல் இந்திய கூட்டாட்சிக்கு எதிரானது மற்றும் நடைமுறைக்கு மாறானது என்றும் அது நாட்டின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றுவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் சீர்திருத்தம் என்ற போர்வையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை திணிக்க மத்திய அரசு முயல்வதாகவும் இம்மசோதா நிறைவேறும் பட்சத்தில் நாடு அராஜகம் மற்றும் சர்வாதிகாரத்தின் கைகளுக்கு சென்றுவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.