2030 ல் நடக்க உள்ள FIFA கால்பந்து உலக கோப்பைக்காக, அதை நடத்தும் நாடுகளில் ஒன்றான மொராக்கோ, இப்போதே 30 லட்சம் தெரு நாய்களை கொடூரமாக கொன்று வருவதற்கு உலகெங்கிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாய்களுக்கு கொடிய விஷம் வைத்தும், கழுத்தில் கயிறால் இறுக்கியும் பல வகைகளில் மொராக்கோ அரசு இந்த கொடூர செயலில் ஈடுபட்டு வருகிறது.