சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு விசாரணைக்காக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். அமலாக்கத்துறையினரால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்காக தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணன் ஆஜரானார். அவரிடம் செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.