மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுக்காக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் மன்னிப்புக் கேட்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை நடந்த சம்பவங்கள் நடந்தவையாகவே இருக்கட்டும் எனவும், அனைத்து இனக்குழுவினரும் நடந்தவற்றை மறக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், 2025-க்குள் மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.