Also Watch
Read this
By: Web Team

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பெண்கள் வடம் பிடித்து இழுக்க தங்க ரதத்தில் வீதி உலா வந்து மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6ஆவது நாளான இன்று மாலை, 32 அடி உயரமுள்ள பாயும் குதிரையுடன் கூடிய தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி தாயார்களுடன் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மகா லட்சுமியின் சொரூபமாக, பெண்கள் விளங்குவதாலும் தங்கம் என்பது மகாலட்சுமிக்கு உரியதானது என்பதாலும் பெண் பக்தர்கள் தங்க ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாடவீதியில் திரண்டு இருந்த பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு இடையே தங்க ரதம் வீதிஉலா நடைபெற்றது.