நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படத்தில், அப்படத்தின் இயக்குநரான ஆர்.ஜே.பாலாஜியே வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சூர்யா இப்படத்தில் வழக்கறிஞராக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கோவையில் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.