இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்க வேண்டுமென கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், 2010-ம் ஆண்டு முதல் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரராக விளங்கி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ்வளவு திறமை வாய்ந்த வீரர் தனது புகழின் உச்சியில் ஓய்வை அறிவித்தது ஏற்க முடியாத ஒன்றாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.