டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த காலங்களில் பாஜக செய்த தவறுகளுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு அளித்ததா, மக்களுக்கு பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவதை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா, என பல்வேறு கேள்விகளை கெஜ்ரிவால் எழுப்பியுள்ளார்.