Also Watch
Read this
Posted on: Feb 17, 2026 06:53 AM
By: Manigandan Raja
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது;
* மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயனடைந்துள்ளனர். 25 இடங்களில் அன்புச் சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 17 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
* மின்னணு துறை உற்பத்தியில் 41 சதவீத பங்களிப்புடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. செமி கண்டக்டர் திட்டத்துக்கு 5 ஆண்டு செயல் திட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 11.19% வளர்ச்சியை எட்டி நாட்டிலேயே பொருளாதார வளர்ச்சியில், தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
* முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் நல்வாழ்விற்காக ரூ.456 கோடி ஒதுக்கப்பட்டது.
* ரூ.285 கோடியில் தமிழகத்தில் சோழர், நொய்யல், வெண்கல அருங்காட்சியங்கள் அமைக்கப்படுகின்றன. மகளிருக்காக இளஞ்சிவப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
* நாட்டிலேயே தொழிற்சாலைகளில் அதிகம் பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழகம் உள்ளது. பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான கட்டணம் 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.
* ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 8 பிற மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் தமிழ் படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாரதியின் கனவை நிறைவேற்றும் அரசாக உள்ளது.
இவ்வாறு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved