ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ராம் மோகன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போயிங் ஏர்லைனர் விமானங்களில் கூடுதல் பாதுகாப்பு ஆய்வுகளை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.