இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் - சிராக் செட்டி ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேறியது.ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, சீன தைபே அணி ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 21-15 என்ற செட் கணக்கில் வென்றது.