இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ள சூழலில், அரபிக்கடலில் இந்திய கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. மே 3 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை இந்த கடற்படை போர் பயிற்சி நடைபெறும் என பாதுகாப்புத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயிற்சியின் போது, போர் கப்பல்களில் இருந்து ஆயுதங்களை ஏவி தாக்குதல் நடத்தும் வகையில் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அரபிக்கடலில் இந்திய கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.