நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தற்போது வருமான வரித்துறையில் புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.இந்நிலையில் தனிநபர் வருமானம் மட்டும் அல்லாமல் மின்னஞ்சல், சமூக வலைத்தள கணக்குகள், ஆன்லைன் முதலீடு உள்ளிட்டவற்றை அனுமதியின்றி வருமான வரித்துறை ஆய்வு செய்யும் புதிய திட்டம் அமலுக்கு வரவுள்ளன.வருமான வரித் தாக்கலின்போது வருமான வரித்துறை ஒவ்வொருவரின் கணக்கையும் ஆய்வு செய்கிறது. இந்நிலையில் வரி ஏய்ப்பு புகாரின் போதும் ஆய்வு செய்து சோதனை நடைபெறும். அவ்வாறு வருமான வரித்துறை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது தனிநபரின் இமெயில், சமூக வளைத்தள கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்யும் நடைமுறை அடுத்தாண்டு வரவுள்ளதுஅதன்படி வருமான வரி மசோதாவின் பிரிவு 247-ன் படி, வருமான வரித்துறை அதிகாரிகள், தனிநபர் அனுமதியின்றி அவருக்கு சொந்தமான மின்னஞ்சல்கள், சமூக வலைத்தள கணக்குகள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஆன்லைன்முதலீடுகள், அதன் தொடர்பாக கணக்குகள் ஆகியவற்றை ஆராய முடியும் என்றும்,இதற்கு வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படவிருக்கிறது.இதன் மூலம் நிதி மோசடி மற்றும் அறிவிக்கபடாத சொத்துக்கள், வரி ஏய்ப்பு ஆகியவற்றை தடுக்க இது உதவும் என்றும், மேலும் வருகிற 2026-27 நிதியாண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஎனவே வருமான வரித் தாக்கலின்போது உங்களுடைய வருமானம் அல்லது சொத்துகளின் விவரங்கள் குறித்து முழுமையாக அளிக்கவில்லை என்றால் அடுத்தாண்டு முதல் இத்திட்டத்தின் மூலம் உங்களுடைய இமெயில், வங்கி கணக்குகள் மட்டும் அல்லாமல் சமூக வலைத்தளங்களைக்கூட இனி பார்க்க முடியும் .