இந்தியா முழுவதும் 600 EV Fast Charging நிலையங்களை அமைக்க உள்ளதாக முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் மோட்டார் இந்தியா தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளிலும், பெரு நகரங்களிலும் இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.