கர்நாடகாவில் உள்ள அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து அதிகளவில் அணைதிறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் நீர் வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பாரித்து கொட்டுகிறது.