ஒடிசாவில் ஒரு மாதமேயான குழந்தையின் நோயை குணப்படுத்த உடலில் ஒன்று இல்ல இரண்டு இல்லா 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் நபரங்பூர் மாவட்டம், சந்தாஹண்டி அருகே உள்ள கம்பரிகுடா பகுதியை சேர்ந்த ஒரு மாதமேயான ஆண் குழந்தை கடந்த சில நாட்களாக காய்ச்சால் அவதியடைந்து வந்துள்ளது. இதனையறிந்த குழந்தையின் பெற்றோர்களும் உறவினர்களும் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட தீயசக்திதான் காரணம் என்று கூறி, சூடான உலோகம் போன்ற கம்பியால், குழந்தையின் தலை மற்றும் வயிறு பகுதியில் சூடு போட்டுள்ளனர். இதனால், குழந்தை கதறி குழந்தை அழுது துடித்துள்ளது. எனினும், குழந்தை அழுகையை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் குழந்தையின் உடலில் 40 முறை சூடு வைத்துள்ளனர். இதனையடுத்து குழந்தை உடல்நலம் மிகவும் மோசமாக பெற்றோர் உமர்கோட் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேசிய நபரங்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சந்தோஷ் குமார் பாண்டா , குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டதற்கு தீயசக்திதான் காரணம் என்று குடும்பத்தினர் நம்பி சூடு வைத்துள்ளனர். ஒடிசாவில் பல பகுதிகளில் இதுபோன்ற முடநம்பிக்கை இப்போது இருந்துவருவதாகவும், இதனால், அப்பகுதயில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.