தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். 8 தனியார் பல்கலைக்கழங்கள் தொடர்பாக தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம திருத்த சட்ட மசோதா ஆகிய 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மாநில அரசுகள் சட்டசபையில் இயற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி 2 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கி உள்ளார்.