கேரள மாநிலம் வயநாடு அருகே பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்ட சூரல்மலை பகுதியில் 11 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. அப்பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக புன்னம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.