குஜராத் மாநிலம் கோண்டல் நகரில் மிளகாய் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, உயர் மின் அழுத்த கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்ததன் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.தீபற்றியதை ஓட்டுநர் கவனிக்காததால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் எரிந்த நிலையிலேயே லாரி இயக்கப்பட்டது. இதனால் பல லட்சம் மதிப்பிலான மிளகாய் மூட்டைகள் எரிந்து நாசமாகின.