விரைவுச் சாலையில் இரவு நேரத்தில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை பார்த்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் மூன்றரை கிலோ மீட்டர் நீள கங்கா விரைவுச்சாலையில், ரபேல், ஜாகுவார், மிராஜ் ஆகிய போர் விமானங்களை தரையிறக்கி, இந்திய விமானப்படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில், எம்.ஐ., 17 வி ஹெலிகாப்டரும் பயிற்சியில் ஈடுபட்டது.