நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள் என்றும், நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கிச் செல்வார்கள் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது. ஆனால் படிப்படியாகவே மாற்றத்தை கொண்டு வர முடியும் என தெரிவித்த உயர்நீதிமன்றம், அதற்கான நேரம் இது எனவும் கூறியுள்ளது.