திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது 108 ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராமசமுத்திரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் பாதயாத்திரை ஆக திருப்பதிக்கு சென்றனர். ரங்கம்பேட்டை வழியாக சென்று கொண்டிருந்த அவ்வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனம் மோதியது. தகவல் அறிந்து சென்ற சந்திரகிரி போலீசார் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தியதில் கடும் பனிப்பொழிவால் விபத்து நடந்தது தெரிந்தது.