நாட்டில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 26 ஆக அதிகரித்து விட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் தேதியில் 257 ஆக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை இப்போது நான்காயிரத்தை தாண்டி உள்ளது. பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் கேரளாவும்,அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவும் குஜராத்தும், டெல்லியும் உள்ளன. கேரளாவில் மட்டும் ஆயிரத்து நானூறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு 215 ஆக உயர்ந்துள்ளது.