சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த தரவுகள் இல்லை என்றால் 69 சதவீத இடஒதுக்கீடு ரத்தாகும் என்றும், உச்சநிதிமன்றம் இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக குறைக்கும் பட்சத்தில் தமிழகம் கலவரபூமியாக மாறிவிடும் என பாமக தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை சார்பில் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசியம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும்,தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை என்றால், சென்னையில் முதல்கட்டமாக போராட்டம் நடத்த உள்ளதாகவும், அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.