பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதனை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பர்மிட் இல்லாமல் விதிமீறல்களில் ஈடுபடும் பேருந்துகளை கண்டறிந்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.