முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசுவது, காலி தகர டப்பா ஓசை போல உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கிண்டலாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ,அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி குறித்த எத்தனை அவதூறு பரப்பினாலும், நையாண்டி செய்தாலும் , அவர் மக்கள் பணியில் இருந்த பின் வாங்க மாட்டார் என தெரிவித்தார்.