தோல்வி பயம் காரணமாகவே அதிமுகவுடனான தங்கள் கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த முறையும் தானே முதலமைச்சராக வருவேன் எனக் கூறுவது சர்வாதிகாரம் போல் இருப்பதாக விமர்சித்தார்.