ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று நள்ளிரவில் புகுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வீட்டிற்குள் குடும்பத்தினர் அனைவரும் உறங்கி கொண்டிருந்த வேளையில் பின்புறம் சிறுத்தை வந்து சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் வனத்துறையினர் கண்காணித்து சிறுத்தையை பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.