Also Watch
Read this
By: Web Team

கேரள மாநிலம், திருச்சூரில் சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார், கால்வாய் தடுப்பில் இடித்து விபத்துக்குள்ளான நிலையில், சாலையை கடந்த நபர், நூலிழையில் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சேலைக்கரை பழையனூர் சாலையில் அதிவேகமாக வந்த கார், வாழக்கோடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலப்புறத்தில் ஏறி வந்தது. அப்போது, இடது புறத்திலிருந்து சாலையை கடந்த நபர், சட்டென வீட்டின் காம்பவுண்ட் சுவரை பிடித்து ஏறி, உயிர் தப்பினார். காரை ஓட்டி வந்தவரும், காயமின்றி உயிர் தப்பியுள்ளார். இதன், சிசிடிவி காட்சி பதிவு தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் பாருங்கள்... அதிவேகமாக வந்த கார், நூலிழையில் உயிர்தப்பிய நபர்