நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 200 பேரிடம் விசாரணை நடத்தி தயார் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை, சீல்டாவில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.அதில் பயிற்சி பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும், சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தைச் செய்ததாகவும் சிபிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.